வியாழன், 5 ஜூன், 2014

திருப்பூர் குமரன்

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
  கொடிகாத்த திருப்பூர் குமரன்
எல்லோரும் புதைக்கப்படுவதில்லை சிலர் விதைக்கப்படுகிறார்கள் என்றொரு பொன்மொழி உண்டு. அதுபோல இவர் உடல் மறைந்தாலும் விடுதலைப் போராட்டகாலத்தில் இவருடைய மரணம் பலர் மனதில் விடுதலைப்போராட்ட வேட்கையை விதைத்துச் சென
்றது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் (04.10.1904) பிறந்தார். சட்டமறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கியபோது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவியது. திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் நடத்திய மறியல் போராட்டத்தில் தீவிரமாகக் கலந்துகொண்டு கையில் தேசியக் கொடியை ஏந்தி தொண்டர் படைக்கு தலைமையேற்றுச் சென்றார் குமரன். அன்று (11.01.1932) காவலர்களால் தாக்கப்பட்டு தலையில் தடியடிபட்டு இந்திய தேசியக் கொடியைக் கையில் ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் உயிர்துறந்தார். தன் உயிர் தன் உடலைவிட்டுப் பிரியும் வரை கொடியை துறக்காததால் இவரைக் கொடிகாத்த குமரன் என்று நாம் அழைத்துவருகிறோம்.

இன்று பலருக்குக் கிரிக்கெட் பார்க்கும்போது மட்டும்தான்
நாட்டுப்பற்று வெளிப்படுகிறது..
திரைப்படங்கள் பார்த்து, நடிகர்களிடம் பேட்டிகண்டு தான் சுதந்திரதினத்தைக் கொண்டாடுகிறார்கள்.

நம் குழந்தைகளிடம் சொல்வோம்...
திருப்பூர் குமரன் ஒரு விடுதலைப் போராட்ட தியாகி. நம்நாடு அன்று அடிமைப்பட்டுக் கிடந்தது இவரைப்போல பல தியாகிகளால்தான் நாம் இன்று சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறோம் என்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக